மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

News image
கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
Updated On :9 ஜூன் 2021, 11:10 am

DIN

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப்பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா பொதுமுடக்க காலத்தில் சென்னையில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.370-க்கும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டன் கட்டுமான கம்பியின் விலை ரூ.68 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார். 

மேலும் “செயற்கையாக கட்டுமானப் பொருள்கள் பதுக்கப்பட்டு விலையேற்றம் உருவாகியுள்ளதோ என மக்கள் நினைக்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.