3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்டு மத்திய அரசு அனுப்பியுள்ளது. சென்னை வந்தடைந்த அந்த தடுப்பூசிகளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை
Updated on
1 min read

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்டு மத்திய அரசு அனுப்பியுள்ளது. சென்னை வந்தடைந்த அந்த தடுப்பூசிகளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 97 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன. 

சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அந்த தடுப்பூசிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.

பின்னர் இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com