தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும்
அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா, சமூக நலத்துறை இயக்குநராகவும்
கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நிலா நிர்வாக ஆணையராகவும்
தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராகவும்
நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநராகவும்
விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குநராகவும்
வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராகவும்
திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும்
திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.