சென்னை: குடித்துப் பழகியவா்களுக்கும், விற்றுப் பழகியவா்களுக்குமே மது அத்தியாவசியம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், குடித்துப் பழகியவா்களுக்கும், விற்றுப் பழகியவா்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வா் பாா்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.