/

துறையூர்: மளிகை தொகுப்புடன் ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது

துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கரோனா 2வது தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
துறையூர்: மளிகை தொகுப்புடன் ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது
Updated On :15 ஜூன் 2021, 5:33 am

DIN

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கரோனா 2வது தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

துறையூர் நகரில் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நியாயவிலைக் கடை மற்றும் ஒன்றியத்தில் நாகலாபுரம், கொல்லப்பட்டி, வீரமச்சான்பட்டி நாகம நாயக்கன்பட்டி, கங்காணிப்பட்டியில் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தருமன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர்  சரண்யா, துறையூர் திமுக ஒன்றிய செயலர் அண்ணாதுரை, நகர செயலர் மெடிக்கல் ந. முரளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நியாய விலைக் கடை பணியாளர்கள்  குடும்ப அட்டைதாரர்களுக்கு   வழங்கிய டோக்கன் வரிசை படி அரசின் கரோனா  நிவாரண பொருட்கள் தொகுப்பும் நிதியும் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.