விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு இலவச மடிக்கணினி வழங்கியது.

இந்நிலையில், 2017-18ஆம் ஆண்டு விடுபட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, விடுபட்ட மாணவர்களுக்கு தருவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய நீதிபதி, மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது. ஆகையால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com