அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:30 am

DIN

தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐஜிபியாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராகவும், 

சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ்மூர்த்தி, சென்னை காவல்துறை தலைமையிட ஐஜிபியாகவும்

நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாகவும்

சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும்

தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாக இருந்த எஸ்.செந்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.