தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐஜிபியாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராகவும்,
சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ்மூர்த்தி, சென்னை காவல்துறை தலைமையிட ஐஜிபியாகவும்
நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாகவும்
சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும்
தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாக இருந்த எஸ்.செந்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.