நீட் தேர்வின் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு இன்று மாலை ஆலோசனை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
நீதிபதி ஏ.கே.ராஜன்
நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கருத்துகளை இறுதி செய்வது குறித்து இன்று மாலை 3ஆம் கட்ட ஆலோசனையில் நீதிபதி ஏ.கே.ராஜனின் குழு ஈடுபடவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com