கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கம் சார்பில், முதற் திட்டமாக, கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும்,50 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், அஞ்சலகம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், வங்கிகள் மற்றும் 24 வார்டுகளின் அனைத்துத் தெருக்கள் என மரங்களை நடப்படுகிறது. கூத்தாநல்லூர் நகரத்தை செழிப்பான, செழுமையான நகரமாக மாற்றப்படும். 24 வார்டுகளிலும் மரம் நடுவதற்காக விரைவில் இடத்தை தேர்வு செய்யப்பட உள்ளன. மேலும், விருப்பம் உள்ளவர்கள் தங்களது வீடுகளின் முன்பு நடுவதற்கு மரங்களைக் கேட்டால் வழங்கப்படும். 50 ஆயிரம் மரக்கன்றுகளையும் வரும் சுதந்திர தினத்தன்று, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர், மாவட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கப்பட உள்ளன என தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.