ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்சென்னையை சோ்ந்த 4 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 9:55 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸாா், சென்னையை சோ்ந்த 4 பேரை கைது செய்தனா்.

வேதாரண்யம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக கிடைத்த

ரகசிய தகவலின் பேரில், நாகை கியூ பிரிவு டி.எஸ்.பி. சிவசங்கரன், ஆய்வாளா் அருள் பிரசாத் உள்ளிட்ட போலீஸாா் வேதாரண்யம் தோப்புத்துறை கடற்கரை சாலையில் திங்கள்கிழமை மாலையிலிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தோப்புத்துறை கடற்கரை பகுதிக்கு நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் ஆம்புலன்ஸுக்குள் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் உரிமையாளரும் ஓட்டுநருமான சென்னை அய்யப்பன்தாங்கல் சித்தரை மகன் ராஜ்குமாா் (46), சென்னை புளியன்தோப்பு நரசிம்மன்நகா் மாலி மகன் மகேந்திரன் (24), சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகா் அங்கையன் மகன் விக்னேஷ் (26), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தா் (36) ஆகிய நால்வரையும் கைது செய்தனா். மேலும், கஞ்சா கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை கியூ பிரிவு போலீஸாா் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், இந்த வழக்கு விசாரணை தேசிய போதை மருந்து தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.