டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேரவைத் தேர்தல்: காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
பேரவைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது
Updated On :3 மார்ச் 2021, 9:35 am

DIN


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை டிஜிபி அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தமிழக காவல்துறையினர் பணியாற்றும் வகையில் காவல்துறை டிஜிபி திரிபாதி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், டிஜிபி அலுவலகத்திலிருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்றும், மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.