குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திமுகவுடன் மீண்டும் பேச்சு தொடரும்: ஈஸ்வரன்

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

News image
மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாலர் ஈஸ்வரன்
Updated On :4 மார்ச் 2021, 6:22 am

DIN

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எடுத்துக் கூறியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.