புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

Updated On :5 மார்ச் 2021, 5:08 am

DIN


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாள்களுக்கு முன்னதாக, அனைத்து வாக்காளர்களுக்கும், தகவல் சீட்டை விநியோகம் செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.