ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம்

தம்மம்பட்டி அருகே, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2021, 7:40 am

DIN


தம்மம்பட்டி அருகே, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை ஊராட்சி கொடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (35). இவரது மனைவி ஈஸ்வரி (31). நிறைமாத கர்ப்பிணியான, இவருக்கு, இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 

மலைக்கிராமத்தில் இருந்து, மருத்துவமனைக்குச் செல்ல உரிய வாகன வசதி எதுவும் இல்லாததால், 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கல் கிராமத்தின் அருகில், 30 கி.மீ. தூரத்தில் உள்ள, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு, ஆம்புலன்சை அவசரமாக, அனுப்பி வைக்குமாறு, ஈஸ்வரியின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.  நீண்ட நேரம் ஆகியும், உப்பிலியாபுரத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் வருவது குறித்த தகவல் அளிக்காமல், கால தாமதம் ஏற்பட்டது. 

அதையடுத்து, கொடுங்கல் கிராமத்துக்கு, 52 கி.மீ.தூரத்தில் இருக்கும் தம்மம்பட்டியில் இருந்து, உப்பிலியாபுரம் வழியாக, 108 ஆம்புலன்ஸ், 2 மணி நேரம் பயணித்து  கொடுங்கல் மலை கிராமத்தைச் சென்றடைந்தது. அவரை ஏற்றிக்கொண்டு, உப்பிலியாபுரம் வழியாக, தம்மம்பட்டிக்கு வரும் வழியில், ஈஸ்வரிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். உடனடியாக, மலைச்சாலையில், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, மருத்துவ உதவியாளர் மணி (35), என்பவர், ஈஸ்வரிக்கு பிரசவம் பார்த்தார். 

அதில், ஈஸ்வரிக்கு சுகப் பிரசவமாக ஆண் குழந்தை பிறந்தது. இப்போது, தாயும், சேயும் நலமாக உள்ளனர். பச்சமலையின் அடிவாரத்தில் உள்ள, உப்பிலியாபுரத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் சென்றிருந்தால், இதுபோன்ற சிக்கலான நிலை ஏற்பட்டு இருக்காது என, மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.