கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கல்?: பறக்கும் படை சோதனை

கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

News image
மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை
Updated On :11 மார்ச் 2021, 3:05 am

DIN

கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கன் சாலையில் உள்ள கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர். ஆனால், வருமான வரித்துறையினர் இல்லாமல் சோதனை நடத்த முடியாத காரணத்தால் வீட்டின் முன்பு சில நேரம் காத்திருந்தனர்.

Story image

அதற்குள்ளாக சம்பவம் குறித்து தகவலறிந்த திமுகவினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பொறியாளரின் வீட்டின் முன்னாள் குவிந்து தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பறக்கும் படையினர் அவரது வீட்டுக்குள் சென்று சோதனையை தொடர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.