ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தம்மம்பட்டியில் காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தம்மம்பட்டியில் மாலை வரை காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

News image
Updated On :11 மார்ச் 2021, 12:20 pm

DIN

தம்மம்பட்டியில் மாலை வரை காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6-ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மக்கள் பாதுகாப்பாகத் தேர்தலில் வாக்களிக்க உதவியாக, பாதுகாப்பாக இருந்து பக்கபலமாக இருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம், வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தம்மம்பட்டியில் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தொடங்கி, உடையார்பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, நடுவீதி, திருச்சி மெயின் ரோடு வழியே சென்று தம்மம்பட்டி காவல் நிலையம் வரை சென்று, மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. 

Story image

இதற்கு  சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. அசோகன் தலைமையில்  ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் , காவல்துறையினர் 75 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 60 பேர் உள்பட 150 பேர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.