தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு

சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
உதயநிதி ஸ்டாலின்
Updated On :15 மார்ச் 2021, 10:27 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். 

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் களம் காண்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, எம்எல்ஏ என்பது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பதவி, நியமனப் பதவி அல்ல. வாரிசு அரசியல் என்று நினைத்தால் மக்கள் என்னை தோற்கடிக்கட்டும். 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.