இந்நிலையில் லட்சுமி ராஜனுக்கு வேறொரு பெண் பார்க்க உள்ளதை அறிந்த தங்கம் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு லட்சுமிராஜனிடம் முறையிட்டுள்ளார். லெட்சுமி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதவன், நாகராஜ், கவிமுரசு ஆகியோர் தங்கம் மற்றும் அவர்களது பெற்றோர்களை அடித்து உதைத்ததன் காரணமாகத் தனது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களிடம் இதுவரை காவல்துறையினர் வாக்குமூலம் பெறக் கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கம் தனது குழந்தையுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.