பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஓமலூர்: மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் திறந்ததால் பரபரப்பு

ஓமலூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் மீண்டும் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஓமலூர்: மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் திறந்ததால் பரபரப்பு
Updated On :17 மார்ச் 2021, 10:11 am

DIN

ஓமலூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் மீண்டும் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. திமுகவினரால் அமைக்கப்பட்ட இந்த அண்ணா சிலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலமாக துணியை கொண்டு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் இன்று மனு தாக்கல் செய்தார். இதனையொட்டி கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் மற்றும் காந்தி சிலைக்கு வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் சிலர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மூடப்பட்டிருந்த அண்ணா சிலையை திறந்து மாலை அணிவித்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.