மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!

துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...

News image

வான்வெளியில் ஈரான் ஏவுகணைகள் - படம் - ஏபி

Updated On :9 மார்ச் 2026, 3:35 pm

துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஈரான் மீண்டும் துருக்கி மீது தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் முக்கிய கட்டடங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்பட அவரின் குடும்பத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், செளவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே துருக்கி வான்வெளிகளில் ஈரான் படையினர் மீண்டும் ஏவுகணை வீசித் தாக்குதல் முயற்சி நடத்தியுள்ளது. ஈரானின் இரண்டாவது ஏவுகணையை முறியடித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரானின் தொடர் தாக்குதலால், துருக்கியின் அதானா பகுதியில் உள்ள தூதரத்தை அமெரிக்கா மூடியுள்ளது. மேலும், அத்தியாவசிப் பணிகளில் இல்லாத ஊழியர்கள் வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமெரிக்க தூதரம் பதிவிட்டுள்ளதாவது:

மார்ச் 9, 2026 அன்று, பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவசரநிலை அல்லாத அமெரிக்க அரசு ஊழியர்கள் மற்றும் அமெரிக்க அரசு ஊழியர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதானாவின் துணைத் தூதரகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தென்கிழக்கு துருக்கியில் உள்ள அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுமாறு வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.