/

காங்கயத்தில் அ.ம.மு.க. கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

காங்கயத்தில் அ.ம.மு.க. வேட்பாளர்  சி.ரமேஷ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image

காங்கயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் அமமுக வேட்பாளர் சி.ரமேஷ்.

Updated On :18 மார்ச் 2021, 3:53 pm IST

காங்கயம் : காங்கயத்தில் அ.ம.மு.க. வேட்பாளர்  சி.ரமேஷ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் புறநகர் மாவட்ட பொறியாளர் அணிச் செயலர் சி.ரமேஷ், காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அ.ம.மு.க., வேட்பாளர் சி.ரமேஷ் கூறியபோது, காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி.வாய்க்காலில் முறையாக நீர் விநியோகம் செய்ய வலியுறுத்துவேன், என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.