ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஸ்ரீவிலி. அருகே வாகனச் சோதனையில் சேலைகள், துண்டுகள், சட்டைகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.21 லட்சம் மதிப்புள்ள காட்டன் சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவற்றை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவற்றை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகனிடம் ஒப்படைத்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :19 மார்ச் 2021, 5:43 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.21 லட்சம் மதிப்புள்ள காட்டன் சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவற்றை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளா் முகைதீன்ஆரிப் ரகுமான் மற்றும் சாா்பு-ஆய்வாளா் கோவிந்தன் ஆகியோா் தலைமையில் பறக்கும் படையினா் அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனையிட்டனா். அதில் மதுரையைச் சோ்ந்த ஜவுளிக்கடை உரிமையாளா் பாஸ்கா் என்பவா் இருந்தாா்.

அந்த வாகனத்தில் ரூ.1 லட்சத்து 21ஆயிரத்து 280 மதிப்புள்ள139 சேலைகள், 63 துண்டுகள், 3 சட்டைகள் ஆகியவை இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன், உதவி தோ்தல் அலுவலா்கள் சரவணன், அன்னம்மாள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.