செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, நான் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியதுவம் அளித்து நடவடிக்கை எடுப்பேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனப் பேசி வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, உடன் சென்ற தோ்தல் பொறுப்பாளா் துரைசெந்தில், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தண்டராம்பட்டு அதிமுக ஒன்றியச் செயலா்கள் அருள்குமாா், தட்சிணாமூா்த்தி, காா்த்தி ஆகியோா் அதிமுக ஆட்சியில் தண்டராம்பட்டு பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து அதிமுக வேட்பாளா் வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டனா்.
இதில், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


