மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகின்றது: ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

News image
தக்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்
Updated On :20 மார்ச் 2021, 8:20 am

DIN

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசும்போது,

குமரி மாவட்டத்தில் எப்போதுமே திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய கூட்டணி ஆட்சியில் திமுக 10 ஆண்டுகள் இருந்ததே என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். நான் கேட்கிறேன் நீங்கள் 10 ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்கிறீர்களே என்ன செய்தீர்கள்?

Story image

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4000 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தெம்பிருந்தால், துணிவிருந்தால் அந்த வழக்கைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சென்று தடை வாங்கியுள்ளார்.

Story image

முதல்வரின் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் வீட்டில் ரெய்டு நடந்த பின்னர் மோடி அரசின் பாதம் தாங்கிய பழனிசாமியாக மாறிவிட்டார். தமிழக உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.

தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகின்றது. ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் அப்போது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 

தமிழக உரிமைகளைப் பாதுகாக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்கிட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் விஜயகுமாருக்கு கை சின்னத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மனோ தங்கராஜுக்கு உதய சூரியன் சின்னத்திலும்,  விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கு கை சின்னத்திலும், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரின்சுக்கு கை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.