ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய்  ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
Updated On :23 மார்ச் 2021, 9:33 am

DIN

தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய்  ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (58). இவர், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் குழாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், மார்ச் 19-ம் தேதியன்று மாலை, கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.ரேகா பிரியதர்ஷிணியுடன் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். 

அத்தகவல் வாட்ஸ்அப்பில் பரவியது. அதனையடுத்து, விடியோ ஆதாரத்துடன், இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. இராமனுக்கு புகார் சென்றது. அதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி, சாகுல் அமீதை திங்கள்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.