வாக்கு எந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடைபெறும் நிலை நடைமுறையிலுள்ளதால், வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடைபெறும் நிலையில், மீண்டும் வாக்கு சீட்டு கொண்டு வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தது.
மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டுவர வாய்ப்பில்லை என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், வேறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் அறிவித்து வாக்கை ஒத்திவைத்தனர்.