எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருப்பதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி  ரவிக்குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர்
Updated On :27 மார்ச் 2021, 9:12 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருப்பதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி  ரவிக்குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு  தொகுதிகளிலும் மொத்தம் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இம்மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூரிலும், உத்தரமேரூரிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15க்கு மேல் இருப்பதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு மகளிர் வாக்குச்சாவடி மையமாக செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 4 பெண்கள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பெண்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அஞ்சல் வாக்கும் அளிக்கலாம். வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாக வாக்களிக்க ஏதுவாகவும் வாக்குச்சாவடி மையங்களில் உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் நடக்க முடியாதவர்களாக இருந்தால் அவர்கள் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.