ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாளை ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் வந்தது

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை காலை வந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரதிற்கு ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Updated On :27 மார்ச் 2021, 10:27 am

DIN


ஸ்ரீவில்லிபுத்தூர்:  நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை காலை வந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.28) மாலை நடைபெற உள்ளது

திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சிகள் கடந்த 20 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது இதை தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி உள்ளனர்

இந்நிலையில், திருக்கல்யாணத்தின் போது ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் வருவது வழக்கம். அந்தப் பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிந்து கொள்வார்

இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து சனிக்கிழமை காலை பட்டு வஸ்திரம் வந்தது. அந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் ஊழியர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்திடம் இருந்து பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.