அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தாராபுரத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரசாரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :29 மார்ச் 2021, 2:55 pm

DIN


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான எல். முருகன் தலைமை வகிக்கிறார். இதில், திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்றார்.

4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு:

பிரதமர் மோடி தாராபுரம் வருகையை ஒட்டி தாராபுரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகள், குடியிருப்புகளில் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். தில்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.