மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட  மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 
மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்
மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட  மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டன. இதனிடையே தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com