கரோனாவுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மருந்துகள், ஆக்ஸிஜன் வசதிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களுக்கு எவ்வித தடையுமின்றி மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.