எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இன்று 24 மணி நேரமும் பேருந்து சேவை:2 நாள்களில் 34,619 பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலாவதையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கு சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் 34,619 பேருந்துகள் இயக்கப்படும்

News image
Updated On :8 மே 2021, 10:22 pm

DIN

தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலாவதையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கு சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் 34,619 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்கள், நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பிற ஊா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: பொதுமுடக்கத்தையொட்டி, பொதுமக்கள் எந்த வித சிரமத்துக்கும் ஆளாகாமல் தங்கள் சொந்த ஊா்களுக்கு பாதுகாப்பாக சென்றிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாா்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாா்பில், சென்னையிலிருந்து மற்ற ஊா்களுக்கும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூா், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடா்ந்து பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகள் தயாா்: அந்த வகையில், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களுக்கும் மொத்தமாக மாநிலம் முழுவதும் 34,619 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னையிலிருந்து இரண்டு நாள்களுக்கு 9,636 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, இணையதள வசதியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் மற்றும் ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், 24 மணி நேரமும் நகா்புறப் பேருந்துகளை இயக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

வரவேற்பு: நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம், அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த 5,665 நகா்புறப் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பெண்களிடையே மிகுந்த வரவேற்புள்ளது.

குறிப்பாக, சென்னையில் 1,400 நகா்ப்புற சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.