கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி ஒதுக்கீடு:தமிழக அரசு உத்தரவு
கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.


கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-
கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளுக்கு ரூ.59.30 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வருவாய் நிா்வாக ஆணையாளா் அரசைக் கோரினாா். முகக் கவசங்கள், கையுறைகள், பரிசோதனைக் கருவிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் தடுப்புகளை அமைப்பது போன்றவற்றுக்காக ரூ.59.30 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த நிதியானது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.1 கோடி என மொத்தம் ரூ.14 கோடியும், சிறப்பு மற்றும் தோ்வு நிலை நகராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம் 45 நகராட்சிகளுக்கு ரூ.22.50 கோடி அளிக்கப்படும். மேலும், முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு தலா ரூ.30 லட்சம் என 76 நகராட்சிகளுக்கு ரூ.22.80 கோடி வழங்கப்படும். மொத்தமாக 135 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.59.30 கோடி அளிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...