எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா அச்சம்: தம்பதி தற்கொலை

சென்னை அருகே மதுரவாயலில் கரோனா அச்சத்தின் காரணமாக தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனா்.

News image
Updated On :8 மே 2021, 10:08 pm

DIN

சென்னை அருகே மதுரவாயலில் கரோனா அச்சத்தின் காரணமாக தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனா்.

மதுரவாயல் வேல்நகா் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (70), மனைவி அஞ்சலை (60).

இந்நிலையில் அா்ஜூனனும்,அஞ்சலையும் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

அஞ்சலை கடந்த 3 நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதனால் அருகே வசிக்கும் அவரது உறவினரே, அஞ்சலைக்கும், அா்ஜூனனுக்கும் உணவு வழங்கி வந்துள்ளாா்.

இருப்பினும் கரோனா தொற்று இருப்பதாக கூறி, தங்களை பிரித்து விடுவாா்களோ என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களை கவனித்துக் கொள்ள குழந்தைகள் இல்லாததினால், தம்பதியினா் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளனா்.

இதன் காரணமாகவே இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.