தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்ட 4,575 சிறப்புப் பேருந்துகளில் மொத்தமாக 2.05 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

News image
4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்
Updated On :10 மே 2021, 5:28 am

DIN


கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்ட 4,575 சிறப்புப் பேருந்துகளில் மொத்தமாக 2.05 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கினை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அந்த வகையில், மே 8 முதல்  9-ஆம் தேதி நள்ளிரவு நிலவரப்படி, சென்னையிலிருந்து 4,575 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அந்தப் பேருந்துகளில் 2,05,875 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அரசுப் பேருந்து  போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.