அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

துர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை

மேற்கு வங்கம் மாநிலம், தூர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது. 

News image
Updated On :13 மே 2021, 5:13 am

DIN


துர்காபூர்: மேற்கு வங்கம் மாநிலம், தூர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மேற்கு வங்கம் மாநிலம், தூர்காபூரில் இருந்து விரைவு ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது.  இதற்காக கொள்கலன்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதனை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்ட விரைவு ரயில் இன்று மாலை சென்னையை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.