/

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

டவ்-தே புயல் இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தில் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 

News image
டவ்-தே புயல் இன்று கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
Updated On :27 ஜனவரி 2024, 8:15 pm

DIN

டவ்-தே புயல் இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தில் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே) இன்று 17.5.2021 காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவிலிருந்து 160 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல்  பகுதியிலிருந்து 140 திசையில் நகர்ந்து இன்று மாலை/இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கும். 

வெப்பச்சலனம் காரணமாக 

17.05.2021, 18.05.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

19.05.21: நீலகிரி, லேசம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்  பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

20.05.2021, 21.05.2021: நிலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒடிய  மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்  பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி  செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டி மீட்டரில்):
பந்தலூர் (நீலகிரி)13, சோலையாறு (கோவை) வாலைபாறை தலா 9, சின்னக்கல்லூர் 6, அகரம் சீகூர், பெருஞ்சாணி அணை தலா 4, பெரியாறு, திருமனுர்,  நடுவட்டம், கிழச்செருவை தலா 3, தென்காசி, திருவையாறு, உடுமலைப்பேட்டை தலா 2, ஓகேனக்கல், ஓட்டாஞ்சத்திரம் 1 செ.மீ மழையும் மழை பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.