47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து: தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு வரவழைத்த துணைநிலை ஆளுநர்

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவழைத்தார்.  

News image
கோப்புப்படம்
Updated On :21 மே 2021, 3:02 pm

DIN

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவழைத்தார்.  

புதுச்சேரி மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

இதையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 10 ஆம்பொனைக்ஸ் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவழைத்தார். பின்னர் அவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனிடையே மருத்துவ உதவிகள் அளித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலங்கானா ராஜ்பவன் அதிகாரிகளுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.