எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கம்

பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 மே 2021, 9:24 pm

DIN

பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சென்னை, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்துகளை, திங்கள்கிழமை முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதால், மீண்டும் இரு நாள்களுக்கு இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போலவே, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாகவும் பொதுமக்களின் தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.