சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எடப்பாடி அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது

எடப்பாடி அருகே, சட்டவிரோதமான முறையில் காய்சப்பட்ட 1500 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயத்தினை போலீசார் பறிமுதல் செய்துஅழித்தனர்.

News image
Updated On :27 மே 2021, 6:09 am

DIN

எடப்பாடி: எடப்பாடி அருகே, சட்டவிரோதமான முறையில் காய்சப்பட்ட 1500 லிட்டர் அளவிலான கள்ளச்சாராயத்தினை போலீசார் பறிமுதல் செய்து
அழித்தனர்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட , கோனமோரிமேடு, இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில், சமூக விரோதிகள் சிலர் கள்ளசாராயம் காய்ச்சி வருவதாக கொங்கணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசன் தலைமையிலான போலீசார், வியாழன் அன்று அப்பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து அங்குள்ள நீரோடை அருகே கள்ளசாராயம் காய்ச்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், அங்கிருந்த 1500 லிட்டர் மதிப்பிலான கள்ளச்சாராயம் மற்றும் அதனை தயார் செய்வதற்கான ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர். 

Story image

மேலும் இது தோடர்பாக எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சிப்பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் அண்ணாதுரை (54) என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 

தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள சந்தர்பத்தினை பயன்படுத்தி, இங்குள்ள வனப்பகுதியில் மேலும் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்களா என போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.