நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா மீண்டும் பரவாத வகையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

News image

மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

Updated On :1 நவம்பர் 2021, 10:08 pm IST


தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா மீண்டும் பரவாத வகையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் பொருள்களையும், புத்தாடைகளையும் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 
கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கு பின்பும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகத்தில் பண்டிகை காலத்திற்கு பிறகு மீண்டும் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.