தீபாவளி: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்

தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது.
புஷ்ப அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேயர்.
புஷ்ப அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேயர்.


நாமக்கல்: தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் சுவாமிக்கு முக்கிய விசேஷ தினங்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, புஷ்ப அங்கி வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் நடைபெறும். அந்தவகையில் தீபாவளி, ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது. 

தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை சுவாமி தரிசனம் செய்தனர். 

நாமக்கல் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.  இதனால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com