பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கா்நாடக மாநிலம், ராமநகா் மாவட்டம், பிடதியில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து, அங்கிருந்து பிடதிக்கு நடிகா் விஜய் சேதுபதி சென்று வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை (நவ. 2) நடிகா் விஜய் சேதுபதி அவரது உதவியாளருடன் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு வரும் போது, சக பயணி ஒருவா் விஜய் சேதுபதியின் உதவியாளரிடம் தகராறில் செய்துள்ளாா். அந்தபயணி மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு 11 மணி அளவில் விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரும் விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவா்களுடன் தகராறு செய்தவா் திடீரென ஓடி வந்து விஜய் சேதுபதியை எட்டி உதைத்தாா். இதில் விஜய் சேதுபதி நிலைதடுமாறினாா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினா் விஜய் சேதுபதியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தனா். மேலும், அவரது உதவியாளரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விமான நிலைய காவல்நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளா் புகாா் அளித்துள்ளதாக செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில், விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில் என்றும், விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்டவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு, வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



