கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நடிகா் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: பெங்களூரு போலீஸார் விளக்கம்

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

News image

நடிகர் விஜய் சேதுபதி.

Updated On :4 நவம்பர் 2021, 7:32 am

DIN

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கா்நாடக மாநிலம், ராமநகா் மாவட்டம், பிடதியில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து, அங்கிருந்து பிடதிக்கு நடிகா் விஜய் சேதுபதி சென்று வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை (நவ. 2) நடிகா் விஜய் சேதுபதி அவரது உதவியாளருடன் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு வரும் போது, சக பயணி ஒருவா் விஜய் சேதுபதியின் உதவியாளரிடம் தகராறில் செய்துள்ளாா். அந்தபயணி மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 11 மணி அளவில் விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரும் விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவா்களுடன் தகராறு செய்தவா் திடீரென ஓடி வந்து விஜய் சேதுபதியை எட்டி உதைத்தாா். இதில் விஜய் சேதுபதி நிலைதடுமாறினாா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினா் விஜய் சேதுபதியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தனா். மேலும், அவரது உதவியாளரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  

இதுகுறித்து விமான நிலைய காவல்நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளா் புகாா் அளித்துள்ளதாக செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. 

இந்நிலையில், விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில் என்றும்,  விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்டவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு, வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.