வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டுகிறது: ப.சிதம்பரம்

13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாக

News image

ப.சிதம்பரம்

Updated On :4 நவம்பர் 2021, 11:24 am IST


சென்னை: 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில்  காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன; பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை புதன்கிழமை குறைத்தது. இந்த நடவடிக்கை இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், 30 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் உள்ளன.அது வலிமையையும், வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் காற்று எந்தப் பக்கம் வீசும் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், அதிக வரிவிதிப்புகளால் எரிபொருள்கள் விலை அதிகமாக உள்ளது என்றும், ஆளும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.