சென்னை: 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன; பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை புதன்கிழமை குறைத்தது. இந்த நடவடிக்கை இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், 30 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் உள்ளன.அது வலிமையையும், வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் காற்று எந்தப் பக்கம் வீசும் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், அதிக வரிவிதிப்புகளால் எரிபொருள்கள் விலை அதிகமாக உள்ளது என்றும், ஆளும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.