ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

குருபகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு வரும் 13 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகி

News image
ஆலங்குடி குருபகவான்.
Updated On :7 நவம்பர் 2021, 10:39 am

DIN


நீடாமங்கலம்: குருபகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு வரும் 13 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வரும் 13.11.2021 சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. 

குருபெயர்ச்சியை முன்னிட்டு நடைபெறும் லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்று அஞ்சல் மூலம் பிரசாதம் பெற்றுக்கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமம். இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் உள்ளது. திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல்பெற்ற தலம். நவக்கிரகங்களில் குருபகவானுக்கு  பரிகார தலமாக விளங்குகிறது. 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழாவும், இந்த விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டும் குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வரும் 13.11.2021 சனிக்கிழமை அன்று பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறவுள்ளது. இதில் ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம் தனுசு,கும்பம் ,மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனை பிரசாதமாக அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவிஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில், ஆலங்குடி -612801. வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 

வரைவோலை எடுப்போர் கும்பகோணம் சிட்டியூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இத்தகவலை கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

குருபெயர்ச்சி விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.