தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து பெண் வியாபாரி பலி

திருச்சி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த பெண் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.

News image

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த வசந்தா.

Updated On :10 நவம்பர் 2021, 6:44 am

திருச்சி: திருச்சி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து பெண் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், கோப்பு கீழத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (64). கணவரை இழந்த இவர், வாழைப்பழ வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். 

இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றார். அப்போது, மின்சாரம் துண்டித்து இருள் சூழ்ந்திருந்தது. இருள் நிறைந்த முள்புதர் பகுதியில் சென்றவர், அங்கு கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இவருக்கு 3 மகன்கள், மகள்கள் உள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸார், வசந்தாவின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.