ஆனால், எஸ்.ஆர். சேகர் தனது சுட்டுரைப் பக்கத்தில், இணைத்திருந்த புகைப்படம் 2017 குஜராத் வெள்ள பாதிப்பில் எடுக்கப்பட்டது. இது அறிந்ததும், திமுகவினரும், சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களும், கடுமையான விமரிசனங்களை முன் வைத்து, அதனை ரீவீட் மற்றும் டேக் செய்ய ஆரம்பித்தனர். விமரிசனங்கள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டேச் சென்றது. நவம்பர் 7ஆம் தேதி இரவு 8 மணியளவில் போடப்பட்ட பதிவு நவம்பர் 10ஆம் தேதி காலை வரை எஸ்.ஆர். சேகர் பக்கத்தில் இன்னும் நீக்கப்படாமலே உள்ளது. தவறான புகைப்படம் என்று சுட்டிக்காட்டிய பிறகும் பாஜகவினர் அதனை நீக்காமலேயே இருப்பது சரியல்ல என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஒரு பக்கம் திமுகவினர் இந்த பதிவுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போதும், சில பாஜகவினர், இன்னமும் அதனை ரீவீட் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.