தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

இரு தரங்களில் 'வலிமை' சிமெண்ட்: விலை தெரியுமா?

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் இரு வகையில் தயாரிக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

Published On :

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் இரு வகையில் தயாரிக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான வலிமை சிமெண்ட் கிடைக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட்டை இன்று (நவ.16) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து விற்பனையைத் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வலிமை சிமெண்ட் விற்பனை குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் இரு தரங்களில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. 

தரத்தின் அடிப்படையில் ப்ரீமியம் ரகம் ரூ.350 மற்றும் சூப்பீரியர் ரகம் ரூ.365 என்று வலிமை சிமெண்ட்டுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரியலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் வலிமை சிமெண்ட் கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார். 

கடந்த மார்ச் மாதம் தனியார் நிறுவனங்களில் சிமெண்ட் மூட்டை ஒன்று ரூ. 420 முதல் 450-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 470 முதல் 490-க்கு வரை விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.