மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேதாரண்யம்:அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் குடைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களுக்கு தன்னார்வலர்களால்  குடைகள் இலவசமாக இன்று (நவ.16) வழங்கப்பட்டன.

News image
ராமகோவிந்தன்காடு பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலர் தாமோதரன், தன்னார்வலர்கள் லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்டோர் .
Updated On :16 நவம்பர் 2021, 9:04 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களுக்கு தன்னார்வலர்களால்  குடைகள் இலவசமாக இன்று (நவ.16) வழங்கப்பட்டன.

தகட்டூர் ஊராட்சி, ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 67 மாணவ, மாணவியர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு குடைகள் வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த  தன்னார்வலர்களான ஹரிஸ் தங்க நகைக் கடை உரிமையாளர்கள்  கிருஷ்ணன், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் வாங்கி வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் தனசேகரன் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் (பொ) சுப்ரமணியன், பள்ளிக் குழுவினர், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.