திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நூல் விலை உயர்வு: ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தினால் அடைக்கப்பட்டுள்ள  ஜவுளிகடைகள்.
Updated On :28 ஜனவரி 2024, 4:35 am

DIN



ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜவுளி உற்பத்திக்கு பயன்படும் நூல் விலை கடந்த கடந்த 40 நாளில் 40 ஆம் நம்பர் நுால் ஒரு கிலோ ரூ.250 -இல் இருந்து ரூ. 330-க்கும், 30 ஆம் நம்பர் நுால் ரூ.200 -இல் இருந்து ரூ.290-க்கும், 20 ஆம் நம்பர் நுால் ரூ.140 -இல் இருந்து ரூ.190-க்கும், வெப்ட் 40 ஆம் நம்பர் ஒரு பாக்கெட் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14,200 என கடுமையாக உயர்ந்துள்ளது. 

Story image

கடையடைப்பு போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் வீதி.

இதனால் சிறு , குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மத்திய , மாநில அரசுகள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் , பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கோரியும்  ஈரோட்டில் 18 அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். 

Story image

கடையடைப்பு போராட்டத்தினால் அடைக்கப்பட்டுள்ள  ஜவுளிகடைகள்.

இதன்படி இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமை என இரு நாள்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெறுகின்றன. இந்த கடையடைப்பு போராட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிகடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

கடையடைப்பு போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் ஈஸ்வரன் கோவில் வீதி.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி வரை வணிகம் பாதிக்கப்படும் என்று ஜவுளி வணிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தினால் ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.